லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விலை குறைப்பு நேற்று முதல் வரும் 30ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 150 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெள்ளை சீனி 7 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 278 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
185 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 179 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியை 9 ரூபாயால் குறைத்து நுகர்வோருக்கு வழங்க சதொச கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி புதிய விலை 185 ரூபாயாக உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 14 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படிஇ புதிய விலை 415 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14
நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
