இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்டு சொகுசு கார்களில் கடத்திச் செல்ல முற்பட்டபோது கற்பிட்டி விஜய கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கேரளா கஞ்சா கடத்திச் செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று அதிகாலை நுரைச்சொல்லைப் பகுதியில் வைத்து குறித்த சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 8 உரைப்பைகளில் பொதி செய்யப்பட்ட 165 கிலோ கிராம் 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றபட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ராகம பகுதிகளை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பய
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
