இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்டு சொகுசு கார்களில் கடத்திச் செல்ல முற்பட்டபோது கற்பிட்டி விஜய கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கேரளா கஞ்சா கடத்திச் செல்வதாக கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று அதிகாலை நுரைச்சொல்லைப் பகுதியில் வைத்து குறித்த சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 8 உரைப்பைகளில் பொதி செய்யப்பட்ட 165 கிலோ கிராம் 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றபட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி விஜய கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ராகம பகுதிகளை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு
நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
