ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானியத் தூதரின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்றும் ஈரானிய தூதரகப் பணியாளர்கள் கீவில் உள்ள ஈரானிய தூதரகப் பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த மோதலில் மொத்தம் எட்டு ஈரானிய ஆளில்லா விமானங்களை உக்ரைனியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக நேற்று இரவு நேர காளொணி உரையில் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும் 'ஆறு ஈரானிய ஆளில்லா விமானங்கள் கிழக்கு மற்றும் தெற்கு கட்டளைகளின் எங்கள் வான் பாதுகாப்புகளால் வீழ்த்தப்பட்டன. கடற்படையின் வான் பாதுகாப்பு மூலம் மேலும் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு தாக்குதல் ஈரானிய ஆளில்லா விமானத்தின் தெற்கு கட்டளையின் வான் பாதுகாப்புப் படைகளால் வீழ்த்தப்பட்டது.
இத்தகைய நட்பற்ற செயலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் தூதரின் அங்கீகாரத்தை பறிக்க உக்ரைன் தரப்பு முடிவு செய்துள்ளது மேலும் தலைநகர் கிவ்வில் உள்ள ஈரானிய தூதரகத்தின் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.
ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கியதாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா கூறும் கூற்றை ஈரான் மறுத்துள்ளது.
போரில் இரு தரப்பிற்கும் ஈரான் உதவாது என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானம் எட்டப்பட வேண்டும் எனவும் ஈரானில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமய
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெர
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீ
சீன அரசானது நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றுக்கான &nbs
கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி
பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்ட
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர்
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத்
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித
உலகம் முழுவதும்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
