ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானியத் தூதரின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்றும் ஈரானிய தூதரகப் பணியாளர்கள் கீவில் உள்ள ஈரானிய தூதரகப் பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்த மோதலில் மொத்தம் எட்டு ஈரானிய ஆளில்லா விமானங்களை உக்ரைனியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக நேற்று இரவு நேர காளொணி உரையில் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும் 'ஆறு ஈரானிய ஆளில்லா விமானங்கள் கிழக்கு மற்றும் தெற்கு கட்டளைகளின் எங்கள் வான் பாதுகாப்புகளால் வீழ்த்தப்பட்டன. கடற்படையின் வான் பாதுகாப்பு மூலம் மேலும் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு தாக்குதல் ஈரானிய ஆளில்லா விமானத்தின் தெற்கு கட்டளையின் வான் பாதுகாப்புப் படைகளால் வீழ்த்தப்பட்டது.
இத்தகைய நட்பற்ற செயலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் தூதரின் அங்கீகாரத்தை பறிக்க உக்ரைன் தரப்பு முடிவு செய்துள்ளது மேலும் தலைநகர் கிவ்வில் உள்ள ஈரானிய தூதரகத்தின் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.
ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கியதாக உக்ரைன் மற்றும் அமெரிக்கா கூறும் கூற்றை ஈரான் மறுத்துள்ளது.
போரில் இரு தரப்பிற்கும் ஈரான் உதவாது என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்மானம் எட்டப்பட வேண்டும் எனவும் ஈரானில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாம
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதி
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச
உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்னும் ஒரு சில தினங்களில் ர
ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுக
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து
ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாம
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள
உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து
