கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து
பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.
இதன்போது 17 பவுண் தங்க நகைகளும் 2லட்சம் ரூபா பணமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருவையாறு பகுதிய சேர்ந்த கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பவரது வீட்டிற்கு நுழைந்த திருடர்கள், வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களான கணவன், மனைவி இருவரையும் தாக்கியதுடன் கை , கால் என்பவற்றைக் கட்டி விட்டு பணம் நகை எங்கே உள்ளது என வினவியுள்ளனர்.
இதன்போது மனைவி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் கையில் இருந்த காப்பையும் கழட்டி கொடுத்தபோது தாலிக்கொடி எங்கே எனக்கேட்டு மீண்டும் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இவ்வாறு கொள்ளையிட்டவர்கள் தப்பிச் சென்ற போது கைத்தொலைபேசிகளையும் எடுத்துக்கொண்டு வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இனையடுத்து வீட்டு உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு தடவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ள
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான்
QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மற
