ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களை தலா 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அத்தோடு, அவர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு – வவுனாதீவு பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சஹாரானின் சாரதி கஃபூர் மாமா, ஹம்ஸா மொஹிதீன் உட்பட நால்வர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது மு
கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு
அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகர
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
