கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உயர்பாதுகாப்பு வலயங்கள் வர்த்தகங்களுக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் புதிய மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நிபுணர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா
கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள்
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
தெல்லிப்பழை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இர
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின
