யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாய் ஆட்டிறைச்சியின் எலும்பு சிக்கியதால் உயிரிழந்தார்.
இந்தப் பெண், கடந்த 25ஆம் திகதி ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சியின் எலும்பு துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியுள்ளது. இதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிவிட்டது.
மறுநாள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்றுள்ளார். அவருக்கு வாய் வழியாக கமெராவை செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால், இதற்கு உடன்பட அந்த பெண் மறுத்து வீட்டுக்கு சென்றுள்ளார் என்று தெரிய வருகிறது.
இந்த நிலையில், திங்கட்கிழமை அந்தப் பெண் இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இறப்பின் பின்னர், கமெரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே இரத்த வாந்தி எடுத்தார் என்று மருத்துவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி ப
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
ஒட்டுமொத்த இலங்கை சிங்கள பௌத்த மக்களையும் கண்கலங்க வை
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்
யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் அதிகாலையில் வழிப்பற
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட
முழு அரசுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டு
இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை
