எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவை பெற்றுக்கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்த போதிலும் தற்போது அது வழமைக்குத் திரும்பியுள்ளது.
மேலும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடையூறு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு பெற்றோலிய தொழிற்சங்கங்கள் பணகப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ள நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினால் பல எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரி
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச
அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ
காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தம
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
