சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் மோசடி முகவர் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு இராஜதந்திர பணிகளால் பாதுகாப்பான தங்குமிடம் வழங்கப்படாது என குறிப்பிடப்படுகின்றது.
வேலைவாய்ப்பில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட புலம்பெயர்ந்த இலங்கை பெண் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் ஆரம்பத்தில் பாதுகாப்பு வீடுகளை வழங்கியது.
எவ்வாறாயினும், இலங்கை பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சட்டவிரோத முகவர் நிலையங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் பயணம் செய்தவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால், தூதரக அதிகாரிகள் பாதுகாப்பு தங்குமிடங்கள் மற்றும் பிற உதவிகளை வழங்கினர்.
சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எ
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கி
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே
உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
