மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்சக்கரவண்யை திருடிச் சென்ற கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான பொலிஸின் IRC பட்டியலிலுள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவரை மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த மாச் மாதம் 22 ம் திகதி பாடசாலை மாணவன் ஒருவன் நகர் பகுதி மத்திய வீதியிலுள்ள உணவு கடை ஒன்றின் முன்னால் துவிச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பிய போது துவிச்சக்கரவண்டி திருட்டு போயுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அந்த பகுதி வீதியில் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா மூலம் திருடனை தேடிவந்த நிலையில் பொதுச்சந்தை கட்டிட பகுதியில் பிச்சைக்கார வேடம் பூண்டு பிச்சை எடுத்துவந்த தெமட்ட கொடை பிரதேசத்தைச் சோந்த 43 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் கொழும்பில் 7 குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு பொலிஸ் IRC பட்டியலில் சேர்க்கப்பட்வர் எனவும், இவரை மட்டக்களப்பு றீதவான் நீதிமன்றில் நேற்று ஆயர்படுத்திபோது இவரை எதிர்வரும் 4 ம திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்த
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்
நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்
யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
