கடந்த சில நாட்களில், 87,000 குடும்பங்கள் கட்டணம் செலுத்தாத காரணத்தால் அவர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மின் பாவனையும் 20 வீதத்தால் குறைந்துள்ளது என சுதந்திர மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் மக்களின் பிரதிபலிப்புகளை அரசாங்கம் அறிந்திருப்பதனால் அரசாங்கம் பெரிய அளவிலான அடக்குமுறைக்கு தயாராகி வருவதாகவும் றிப்பிட்டுள்ளார்.
அதற்கான சட்ட அடிப்படையை நிறுவும் வகையில், மிகவும் ஆபத்தான சட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது என்றும் பீரிஸ் தெரிவித்தார்.
உத்தேச பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்று ஆபத்தான எந்த சட்டமூலமும் கடந்த இரண்டு தசாப்தங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட இது மிகவும் ஆபத்தானது என்றார்.
மக்கள் கருத்து இல்லாத அரசாங்கத்திற்கு இவ்வாறான சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு எந்த சட்டபூர்வ அங்கீகாரமும் கிடையாது என தெரிவித்த பீரிஸ், ஆணையை உதைத்து மக்களை ஏமாற்றும் இந்த திட்டத்தை அனுமதிக்க தற்போதைய பாராளுமன்றத்திற்கு தார்மீக உரிமை இல்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா
யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு
விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா
கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டி
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக
தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபர்
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
