யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக பொருத்தி கேகாலை வைத்தியசாலையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
யுவதியின் உடலில் இருந்து துண்டான கை நேற்று முன்தினம் நள்ளிரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதனை வெற்றிகரமாக இணைத்ததாக கேகாலை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கேகாலை எரதுபதுபிட்டிய பிரதேசத்தில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் 21 வயதான யுவதியின் வலது கையின் கீழ் பகுதி துண்டாகியுள்ளது.
துண்டாகியை கை பகுதியை ஐஸ் கட்டிகள் இடப்பட்ட பையில் இட்டு, யுவதியுடன் அயல் வீட்டினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் போது உடனடியாக செயற்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்ன உள்ளிட்ட மருத்துவர்கள் குழு, யுவதியின் கையை இணைக்கும் சத்திர சிகிச்சையை இரவு 9 மணியளவில் ஆரம்பித்தனர்.
சத்திர சிகிச்சைக்கு பின்னர் யுவதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது உடல் நிலை தேறிவருவதாக மருத்துவர் ஆனந்த ஜயவர்தன கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில்
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியா
தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்
டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின்
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
