யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக பொருத்தி கேகாலை வைத்தியசாலையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
யுவதியின் உடலில் இருந்து துண்டான கை நேற்று முன்தினம் நள்ளிரவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதனை வெற்றிகரமாக இணைத்ததாக கேகாலை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கேகாலை எரதுபதுபிட்டிய பிரதேசத்தில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் 21 வயதான யுவதியின் வலது கையின் கீழ் பகுதி துண்டாகியுள்ளது.
துண்டாகியை கை பகுதியை ஐஸ் கட்டிகள் இடப்பட்ட பையில் இட்டு, யுவதியுடன் அயல் வீட்டினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் போது உடனடியாக செயற்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்ன உள்ளிட்ட மருத்துவர்கள் குழு, யுவதியின் கையை இணைக்கும் சத்திர சிகிச்சையை இரவு 9 மணியளவில் ஆரம்பித்தனர்.
சத்திர சிகிச்சைக்கு பின்னர் யுவதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது உடல் நிலை தேறிவருவதாக மருத்துவர் ஆனந்த ஜயவர்தன கூறியுள்ளார்.
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி
நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
நாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தன
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்
மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி ப
