கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்து பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த நபரை பொரளை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட மேலும் இருவர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாக கூறி வைத்தியர் போல் நடித்து 65,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக மருதானையை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவ்வாறே குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை அவுஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 50,000 ரூபா பணம் கேட்டுள்ளனர்.
சந்தேகநபர் தனக்கு இரண்டு ஆப்பிள் தோட்டங்கள் இருப்பதாகவும், இருவருக்கு அங்கு தொழில் செய்ய வாய்ப்பு தருவதாக கூறி இந்த இருவரிடமும் மோசடியாக பணம் பெற்றுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று (05) கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தாம் போலி வைத்தியர் என ஒப்புக்கொண்டார்.
மேலும் முறைப்பாட்டாளர்களிடம் தீர்வு காண விருப்பம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செய
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய
