பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியின் முகத்தில் தந்தையொருவர் ரைஸ் குக்கரின் மூடியால் சூடு வைத்துள்ளதாக முறைப்பாடு பதிவாகி உள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்காயங்களுடன் நேற்று (05) இரவு தனது தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு, பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சிறுமி வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சந்தேக நபரான தந்தை இரவு 7.45 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து, “ஏன் இவ்வளவு சாதம் சமைக்கிறாய்?” எனக் கூறி ரைஸ் குக்கரின் மூடியை சிறுமியின் முகத்தில் வைத்துள்ளதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி
கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
2020 (2021) ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர ச
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து
