கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்தார்.
வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை - காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.
எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான ரயில் மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதால், ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரி
இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமை
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வ
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக
வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலை
இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மி
