யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில், மாணவர் ஒன்றியம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.
இதன்போது பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட நிலையில், மாணவர்களினதும் தாயகத்தின் புலம்பெயர் தேசங்களிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் ஆதரவுகளினாலும் போராட்டங்களினாலும் மீண்டும் தூபி அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் இத்திட்டத்திற்கு நிதி தேவைப்படுவதால், அதற்கான நிதி உதவியை வழங்குமாறு அனைவரிடமும் மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிதியுதவியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடுமாறும் வங்கி கணக்கு இலக்கத்தையும் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு மாணவர் ஒன்றியத்திடம் மாத்திரமே இந்த நிதி உதவியை வழங்குமாறும் வேறு இடங்களில் இதற்கான நிதி சேகரிக்கப்படவில்லை என்பதையும் ஏதேனும் சேகரிப்புகள் இடம்பெற்றால் அதற்கு மாணவர் ஒன்றியம் பொறுப்பில்லை என்பதனையும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி வ
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் க
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
