சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில் யான்டாய் நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 10-ந்தேதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது.
இதில் சுரங்கத்தின் நுழை வாயில் பகுதி இடிந்து இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் 22 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். எனினும் சுரங்க நிர்வாகம் விபத்து நடந்த 30 மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ் மற்றும் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தது.
மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கியதால் மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை நெருங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால் 6 நாட்கள் ஆகியும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் விபத்து நடந்த 7 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் 12 பேர் உயிருடன் இருப்பது நேற்று தெரியவந்தது. சுரங்கத்தில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக தொழிலாளர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மீட்பு குழுவுக்கு தெரியப்படுத்தினர்.
இது மீட்புக் குழுவிற்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மீட்புக்குழுவினர், தொழிலாளர்கள் 12 பேரையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேசமயம் மற்ற தொழிலாளர்கள் 10 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.
துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நக
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர
நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட
ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில்
உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நட
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ம
ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர
பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாக
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் தீவ
