அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவை மீளமைக்க அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன், உலக சுகாதார அமைப்பு மற்றும் பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேரும் என்ற செய்தியை வரவேற்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் (Hua Chunying) இன்று (வியாழக்கிழமை) ஊடக மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பதவியேற்பு உரையில் பைடன் ‘ஒற்றுமை’ என்ற வார்த்தையைப் பலமுறை பயன்படுத்தியதாகவும், அந்த ஒற்றுமை அமெரிக்க-சீனா உறவுகளில் தற்போது தேவைப்படுவதாகவும் ஹுவா சுனிங் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின் கீழ், சீனாவுடனான பதற்றங்கள் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கொரோனா தொற்று மற்றும் மனித உரிமைகள் ஆகிய விடயங்களில் காணப்பட்டன.
இந்நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் செயலாளரான மைக் பொம்பியோ உட்பட பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கு சீனா, ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய பகுதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊ
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா
இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால்
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்
குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய ராணுவ
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெ
கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கு
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.ந
அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கி
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
