More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்
மீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்
Jan 25
மீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்

பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர மாற்று நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



அத்துடன், கடந்த காலப் போராட்டத்தில் தமிழக மீனவர்களுடைய பங்கு அளப்பரியது எனவும், அண்மையில் உயிரிழந்த நான்கு மீனவர்கள் தொடர்பாக தமிழ் மக்கள் சார்பான ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.



அவர் தெரிவிக்கையில், “இந்தியா எமது அருகில் இருக்கக் கூடிய நாடு. பாக்கு நீரிணையில் மன்னார் வளைகுடாவில், வட பகுதியில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தமிழ் மக்கள்தான் மீன் பிடிக்கிறார்கள்.



ஆகவே, எமது கடற் பரப்புக்குள் அவர்கள் வருவதும் அவர்களது பரப்புக்குள் நாங்கள் போவதும் காலாதி காலமாக நடைபெற்று வந்துள்ளது.



ஆனால், தற்போது இந்திய மீனவர்களின் வள்ளம் மூழ்கடிக்கப்பட்டதும் அதில் நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டதும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. இலங்கைக் கடற்படையினுடைய கப்பலில் அடிபட்டுத்தான் மீனவர்களின் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.



அவ்வாறான நடவடிக்கை ஏற்புடையது அல்ல. நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். எனவே, நிச்சயமாக இது அனுதாபத்துடன் பார்க்கப்பட வேண்டிய விடயம்.



எமது கடந்த காலப் போராட்டத்தில் இந்தியத் தமிழர்களுடைய அதிலும் குறிப்பாக, மீனவர்களுடைய பங்கு என்பது அளப்பரியது. அதனை நாம் மறுப்பதற்கில்லை.



மீனவர்கள் அத்துமீறும் போது கைதுகள் நடந்திருக்கின்றன. அவ்வாறே தற்போதும் நடந்திருக்கலாம். ஆனால், அதற்கு மேலதிகமாகச் சென்று நான்கு மீனவர்கள் நீரில் மூழ்கி இறந்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.



இந்நிலையில், இலங்கை அரசாங்கம் இதுபோன்ற பிரச்சினைகள் இனிமேல் நடைபெறாமலிருக்க குறைந்தபட்சம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



இதேவேளை, தாய்லாந்து, சீனா, தாய்வான் போன்ற பல நாடுகள் இலங்கையின் கடல் வளத்தைச் சூறையாடுகின்றன. அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது.



ஆகவே, அவ்வாறானவர்கள் எமது கடல்வளத்தைச் சூறையாடுகின்றார்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது கொழும்பு அரசாங்கமே. ஆனால் அவை தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை.



எனினும், வட கடலில் பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா கடலில் இந்திய தமிழ் மீனவர்களும் வடக்கு மாகாண தமிழ் மீனவர்களும் தொடர்ச்சியாக மீன் பிடிப்பதென்பது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.



அவை, சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டியதாகும். இதனை இரு தரப்பு மீனவர்கள், இரு தரப்பு அரசாங்கங்கள் இணைந்து பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும். இதனைவிடுத்து வேறு நடவடிக்கைகளை எடுப்பதென்து தவறானது.



இதேவேளை, எமது அனைத்து தமிழ் மக்களின் அனுதாபங்களும் இறந்த தமிழக மீனவர்கள் மேல் நிச்சயமாக உண்டு” என்று தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct18

2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர

Mar30

 நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்

May27

கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியா

Apr03

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும்

Oct25

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள

Oct14

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த

Apr10

வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத

Oct04

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி

Mar10

அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு

Feb07

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்

Feb14

இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த

Apr28

முன்னாள் அமைச்சர்  ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும

Oct21

கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட

Jul16

மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்த

Jun15

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (00:33 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (00:33 am )
Testing centres