தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், “சீன அரசாங்கம் தாய்வான் உட்பட அதன் அண்டை நாடுகளை மிரட்ட முயற்சிக்கும் முறையை அமெரிக்கா கவலையுடன் குறிப்பிடுகிறது.
சீனா, தாய்வான் மீதான இராணுவ, தூதரக மற்றும் பொருளாதார அழுத்தத்தை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாய்வான் பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்களது பகிரப்பட்ட செழிப்பு, பாதுகாப்பு மற்றும் மதிப்புகளை முன்னேற்றுவதற்காக எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நாங்கள் துணை நிற்போம். அதில் ஜனநாயக தாய்வான் உடனான எங்கள் உறவுகளை ஆழப்படுத்துவதும் அடங்கும்’ என கூறினார்.
சீனாவில் கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தீவு நாடான தாய்வான் உருவானது.
ஆனாலும் தாய்வான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தேவைப்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீன அரசாங்கம் கூறி வருகிறது. இந்த சூழலில் தாய்வானை அச்சுறுத்தும் விதமாக சீனா சமீபகாலமாக தனது தென்கிழக்குப் பிராந்தியத்தில் இராணுவ படைகளை குவித்து வருகிறது.
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு க
பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட
உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அ அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீத ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலா பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரரு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட
