அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் நோக்கிச் சென்ற லைபீரியக் கப்பலான எம்.வி.யுரோசன், திருகோணமலைத் துறைமுகத்தை அண்மித்து விபத்துக்குள்ளானது.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதி சிக்குண்டுடிருந்த குறித்த கப்பலை இலங்கைக் கடற்படை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மீட்டுள்ளது.
கப்பலில் சீமெந்து உற்பத்திக்குப் பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் தொன்னும், 720 மெற்றிக் தொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக் கப்பல், கடந்த ஜனவரி எட்டாம் திகதி அபுதாபியில் இருந்து சீமெந்துக்கான திரவ பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கிப் பயணமாகியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பகல் சின்ன இராவணா கோட்டைக் கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியதுடன் கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டதை அடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று பிற்பகல் வேளையில் இலங்கைக் கடற்படையினர் குறித்த கப்பலை மீட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்தியுள்ளனர். இந்நிலையில், கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல அரசியல் தந்திரம
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள ந
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மரு
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன
