எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அமெரிக்கா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவத்கு ரஷ்ய ஜனாதிபதி தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் பல மாதங்களாக சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் ரஷ்யாவுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்ட நவல்னிக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன் மொஸ்கோவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களில் இவ்வார இறுதியில் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை அமெரிக்கா கண்டித்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தது.
இந்த சூழலில், உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியத
உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்க
இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம
பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய
ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
