போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக நாட்டின் அநேக மாவட்டங்களில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சால் 12 மாடி கார் தரிப்பிடங்கள் கட்டப்படவுள்ளன.
இதன்படி கொழும்பு 07இலுள்ள நொரிஸ் கனல் வீதியில் கண் மருத்துவமனைக்கு சமீபமாக கார் தரிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
கொழும்பு பொது மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி வாகனத் தரிப்பிடவசதிகள் இல்லாததால் இப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலை அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அனுமதிப்பதில் பாதகமான விளைவையும் ஏற்படுத்துகிறது.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரமளித்தது.
இதன் முதலாவது திட்டம் கொழும்பு லேக்ஹவுஸ் அருகே தொடங்கியுள்ளதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்காக 1.113 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, டி.எஸ்.சேனநாயக்க மாவத்தை சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ், நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் வாகனத் தரிப்பிடங்கள் கட்டப்படுவதுடன் பத்தரமுல்ல, அநுராதபுரம், குருநாகல் ஆகிய இடங்களிலும் கார் தரிப்பிடங்களை அமைக்கும் திட்டமுள்ளதாகக் கூறப்படுகிறது.
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தா
இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்ச
ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை ப்ரிமா நிறுவனம், 15
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
