போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக நாட்டின் அநேக மாவட்டங்களில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சால் 12 மாடி கார் தரிப்பிடங்கள் கட்டப்படவுள்ளன.
இதன்படி கொழும்பு 07இலுள்ள நொரிஸ் கனல் வீதியில் கண் மருத்துவமனைக்கு சமீபமாக கார் தரிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
கொழும்பு பொது மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி வாகனத் தரிப்பிடவசதிகள் இல்லாததால் இப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலை அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அனுமதிப்பதில் பாதகமான விளைவையும் ஏற்படுத்துகிறது.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரமளித்தது.
இதன் முதலாவது திட்டம் கொழும்பு லேக்ஹவுஸ் அருகே தொடங்கியுள்ளதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்காக 1.113 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, டி.எஸ்.சேனநாயக்க மாவத்தை சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ், நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் வாகனத் தரிப்பிடங்கள் கட்டப்படுவதுடன் பத்தரமுல்ல, அநுராதபுரம், குருநாகல் ஆகிய இடங்களிலும் கார் தரிப்பிடங்களை அமைக்கும் திட்டமுள்ளதாகக் கூறப்படுகிறது.
யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்ல
18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர
மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்ட
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ
அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட
வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட
