கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை என ஜனாதிபதியின் ஆலோசகர் லலித்வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்டாயப்படுத்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளை வழங்கும் நடவடிக்கை சுயவிருப்பத்தின் பேரிலேயே முன்னெடுக்கப்படும் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்தினை பயன்படுத்துபவர்கள் அதற்கு முன்னர் மருந்தினை பயன்படுத்த சம்மதிக்கும் படிவமொன்றில் கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் மருந்தினை பெறுவதற்கு தயங்கியவர்கள் பின்னர் தங்கள் மனதை மாற்றினால் அவர்கள் குறிப்பிட்ட நிலையங்களில் தங்களிற்கான மருந்தினை செலுத்திக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் சுகாதார அமைச்சுக்கு வழங்கிய மருந்துகள் நாளை எயார் இந்தியா விமானம் மூலம் இலங்கை வந்தடையும். அந்த மருந்துகள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள லலித்வீரதுங்க அவற்றை விசேட குளிரூட்டப்பட்ட டிரக்குகள் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடய
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட
யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழ
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக
