வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது.
இந்த தகவலை வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
மேலும் வட.மாகாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படவேண்டிய சுகாதாரத் துறையினரின் விபரங்களை சுகாதார அமைச்சுக் கோரியிருந்தது.
அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்றனர்.
அவர்களுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் என ஆயிரம் பேருக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 400 பேரின் விவரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீ
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெய
தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வ
