அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்ப்பதாக கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வன்னிபிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக புதியஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை நன்மையான விடயமே.
ஆட்சி மாறியுள்ளமையால் நடந்த உண்மைகளை அறிவதற்காக அவ்வாறான குழுக்களை அமைத்து, தகவல்களை பெற்றுக்கொள்வதும் உண்டு. அந்தவகையில் அது வரவேற்ககூடிய விடயமாகும்.
இதேவேளை, இந்தியாவுடனும் நாங்கள் நட்புறவை பேணவேண்டும். அந்தவகையில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளமையும் நல்ல விடயமேயாகும். சட்டரீதியான பிரச்சினைகள் இருப்பதால் 51 வீதத்தை இலங்கை அரசும் வேறு முதலீட்டாளர்களிற்கு 49 வீதத்தையும் வழங்கினாலேயே அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றவகையில் அது செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்காகவே அதனை வழங்குவதாக கூறுகின்றமை எதிர்கட்சி அரசியல்வாதிகள் வழமையாக கதைக்கும் விடயமே” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்
தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்
