கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மொடர்னா இன்க் மற்றும் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய கொவிட் -19 தடுப்பூசிகளின் அளவுகளுக்கான ஒப்பந்தங்களை கொலம்பியா எட்டியுள்ளது.
இதற்கமைய பெப்ரவரி 20ஆம் திகதியிலிருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான கொலம்பியா, சுமார் 34 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதாக நம்புகிறது.
தற்போது வரை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மூலமும் உள்நாட்டுத் தயாரிப்பின் மூலமும் பெறப்பட்ட 35 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் எஸ்.இ மற்றும் அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி ஆகியோரால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் ஒவ்வொன்றும் 10 மில்லியன் டோஸைப் பெறுவதற்கான ஒப்பந்தங்களை கொலம்பியா முன்பு அறிவித்தது.
அத்துடன் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் மருந்துப் பிரிவான ஜோன்சென் உருவாக்கிய தடுப்பூசியின் 9 மில்லியன் டோஸ்கள். இது உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் கோவாக்ஸ் பொறிமுறையின் மூலம் 20 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று ஜாலாலாப
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்த
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க
இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத் கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இருந்த வேலையில், சீனாவி உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்கள
