கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா இலங்கை ஜப்பான் ஆகியநாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி அளித்து ஒரு சில மணித்தியாலங்களில் இலங்கைக்கான இந்திய தூதரக பேச்சாளர் ஒருவரின் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு மே மாதம் கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திக்காக இலங்கை ஜப்பான் இந்தியா ஆகியநாடுகள் கைச்சாத்திட்ட முத்தரப்பு உடன்படிக்கையை இநத மூன்று நாடுகளின் ஒத்துழைப்புடன் முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பினை நான் மீள வலியுறுத்தவிரும்புகின்றேன் என இந்திய தூதரக பேச்சாளர் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்பில் பல முறை தெரிவித்துள்ளோம் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தெரிவித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவது என இலங்கை அமைச்சரவை மூன்று மாதத்திற்கு முன்னர் தீர்மானித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்
அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுத
உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப
நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொரு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற
