More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!
Jan 30
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்!

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:



கர்நாடகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 17-ந் தேதி நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதால், போலியோ சொட்டு மருந்து வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந் தேதி (நாளை) நடக்கிறது. இதில் கர்நாடகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 64 லட்சத்து 7 ஆயிரத்து 930 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை முதல்-மந்திரி எடியூரப்பா தனது அலுவலக இல்லத்தில் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளும், இப்போது போலியோ சொட்டு மருந்தை பெற வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவது இல்லை. கர்நாடகத்தில் 11 ஆண்டுகளாக புதிதாக போலியோ பாதிப்புகள் ஏற்படவில்லை.



போலியோ இல்லாத நாடாக இந்தியா ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். 85 லட்சத்து 5 ஆயிரத்து 60 டோஸ் சொட்டு மருந்துகள் தயாராக உள்ளன. இந்த பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 179 மருத்துவ ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.



6, 645 மேற்பார்வையாளர்கள், 904 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 32 ஆயிரத்து 908 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இந்த விஷயத்தில் தவறான தகவல்களை மக்கள் நம்பக்கூடாது. சிலருக்கு லேசான பக்க விளைவுகள் இருந்தன. ஆனால் அதுவும் சரியாகிவிட்டது.



இந்த தடுப்பூசியை நாம் பயன்படுத்தாவிட்டால், நமக்கு மிகப்பெரிய இழப்பு. கர்நாடகத்தில் பள்ளிகளை திறக்க அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வித்துறை இணைந்து இந்த விஷயத்தில் செயல்பட்டு வருகிறது.



இவ்வாறு சுதாகர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை

Jun28

காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்

Mar09

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு

Mar10

பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி

Feb23

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை 

மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா

Jun30

கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ

Sep24

தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '

Apr03

இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ

Jul30

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்

May27

மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள

Jul14

தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின்

Jan20

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய

Jul18

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள

Feb20

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (20:18 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (20:18 pm )
Testing centres