வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி, செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர், வீதியை கடக்க முற்பட்டபோது, மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராச்குமார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்து தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கர
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமு
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்க
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
