எகிப்தில் 2000 ஆண்டு பழமையான தங்க நாக்கினைக் கொண்ட மம்மியொன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது .
அந் நாட்டில் அலெக்சாண்ட்ரியா (Alexandria) பகுதியிலுள்ள டபோசிரிஸ் மேக்னா (Taposiris Magna ) என்ற கோயிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே குறித்த மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் பழம்பெரும் கோயில்களில் கடந்த 10 வருடங்களாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 16 புதையிடங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த புதையிடங்களில் பல மம்மிகள் புதைந்திருந்தன. மார்பில் அணிகலன்கள் மற்றும் தலையில் கொம்புகள் வைத்த கிரீடத்தினாலும், மம்மிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவை சரியான முறையில் பதப்படுத்தப்படவில்லை.
அதில் ஒரு மம்மியின் வாயில் தங்க நாக்கு இருந்ததைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்தனர்.
எகிப்து நாட்டு மக்கள் உயிரிழந்தபின் ஒசிரிஸ் என்ற எகிப்து கடவுளுடன் உரையாடுவார்கள் என்று நம்பப்பட்டது. ஒசிரிஸ், எகிப்து நாட்டின் பாதாள உலகின் ஆட்சியாளர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இறந்தபின்னும் ஒசிரிஸுடன் எகிப்து மக்கள் பேசுவார்கள் என்பது அந்நாட்டு முன்னோர்களின் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையின்படி, இந்த மம்மிக்கு சொந்த நாக்கு அகற்றப்பட்டு இம்மாதிரியான தங்க நாக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட
தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற
ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ
ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்கள் தங்கள
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்க
கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு
