73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின் அனைத்து இன, மத, மொழி பேசும் மக்களுக்கும் அவர்களை வழி நடத்துகின்ற நாட்டின் தலைவர்களான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ உட்பட சகல அரசியல் தலைவர்களுக்கும் மும்மணிகளின் ஆசிகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று சர்வ மதத் தலைவர்கள் தமது பூரண ஆசிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவானது இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக ஆனால் சகல சம்பிரதாயங்களுடன் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய இந்த பொன்னான நன்னாளில் சகல இன, மத, மொழி மக்களும் ஒற்றுமையாகவும் பேதங்களை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்று உறுதிபூண்டு எமது எதிர்கால நல்வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவரை காலமும் ஏதாவது அத்தகைய மனக்கசப்புகள் சிறுசிறு சஞ்சலங்கள் இருந்தாலும் அவற்றை இன்றுடன் இல்லாதொழித்து இனிவரும் காலத்தில் புதிய வாழ்விலே ஆரம்பிப்போம் என உறுதி பூண்டு இன்றைய நாளை அனைவரும் இணைந்து கொண்டாடுவோம் என சர்வமதத்தலைவர்கள் ஆன புத்தசாசன மத விவகார கலாசார அமைச்சின் இணைப்பாளர்களான வணக்கத்துக்குரிய கலாநிதி அனுராக் காசா நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள், கலாநிதி ஹஸன் மௌலானா, வண பிதா கலாநிதி குருகுல ஆராய்ச்சி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாட
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ரா
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல
