அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ் புளொயிட்(George Floyd) என்பவர் அந் நாட்டுப் பொலிஸ் அதிகாரியொருவரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் இனப்பாகுபாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறித்ததே.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இது அமெரிக்க வெள்ளை இன பொலிஸார் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அண்மையில் ரோச்சஸ்டர் (Rochester) மாகாணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் காருக்குள் ஏற்ற முற்பட்டனர்.
அப்போது சிறுமி கட்டுக்கடங்காமல் எதிர்த்து பொலிஸாரைத் தாக்கியதால் அவரைக் கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை சிறுமியின் முகத்தில் அடித்துள்ளதோடு கைவிலங்கிட்டுள்ளனர்
இச் சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கைது செய்த வெள்ளையின காவலரான அன்ரே அண்டர்சன் (Andre Anderson) மீது விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் இச் சம்பவத்தையடுத்து நேற்றைய தினம் குறித்த அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் இதுதொடர்பாக குறித்த அதிகாரி கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி தங்களைத் தாக்கியதால் அவரை பத்திரமாக அழைத்துச்செல்ல பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாகவும், கறுப்பின சிறுமி என்று பாகுபாட்டை நாங்கள் பார்க்கவில்லை, அவளை வலுக்கட்டயாக அவளை தாக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றின
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த வி
உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குத
ஜி 20 மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய வெளிவிவ
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர்
உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட
