வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் இறப்பைச் சந்தித்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வட மாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத் திலிருந்தும் 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள் ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து வட மாகாணத்தில் இதுவரை 805 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 362 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 221 பேரும், மன்னார் மாவட்டத்தில் 176 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 34 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் இன்று வரை வட மாகாணத்திலே கொரோனா நோயால் மூன்று இறப்புகள் ஏற்பட் டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் இரு இறப்புகளும் வவுனியா மாவட்டத்தில் ஓர் இறப்பும் ஏற்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப
மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்ச
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏ
தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா
