ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னியை விடுதலை செய்யக்கோரி அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மைனஸ் 40 டிகிரி அளவுக்கு மிகவும் குளிர் நிறைந்த இடங்களில் கூட ரஷ்ய அரசுக்கு எதிராக நவல்னியின் ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் 5,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது வார இறுதியாகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம் செய்தனர். தலைநகர் மொஸ்கோவில் பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
நவல்னி, நஞ்சூட்டப்பட்டு, நினைவற்ற நிலையில், ஜெர்மனியில் ஐந்து மாதங்களாகச் சிகிச்சை பெற்றுவந்தார்.
அதன் பின் ரஷ்யாவுக்குத் திரும்பிய அவர் மொஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் நவல்னிக்கு நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவ
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பி
சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக ந
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள்
