கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “புனேவைச் சேர்ந்த சீரம் மையத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி மருந்தை வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்ய வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம், செர்பியா உள்ளிட்ட 25 நாடுகளுக்கு 2.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படும்.
ஏற்கனவே 20 நாடுகளுக்கு 1.68 கோடி டோஸ் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஷ், பூடான், ஆப்கன், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 63 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தும் அடங்கும்.
சமீபத்தில் கனடா 10 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை வழங்குமாறு கோரியிருந்தது. ஆனால் தற்போது ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை.
இதற்கு மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை வரவில்லை என்பது தான் காரணம் என கூறப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய்
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ம
இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய
லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன
எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
