அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு போர் பயிற்சியினால், அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை என்பதனை அமெரிக்கா மறைமுகமாக கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறுகையில், ‘கடற்படைகளின் திறன்களை பயன்படுத்தும் பயிற்சி எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற பயிற்சிகள், கடல்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், உலகெங்கும் உள்ள எங்கள் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை ஆதரிப்பதற்கும், நம்முடைய திறனுக்கு ஒரு தடையாக இருக்கும் என்று கருதவில்லை’ என கூறினார்.
ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள், இந்த மாத நடுப்பகுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போவதாக ஈரானுக்கான ரஷ்ய தூதர் லெவன் தாகரியன் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குறித்த மூன்று நாடுகளும் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்
ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட ந
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீ
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவ
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது
தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ
ரஷிய படைகளின் தாக்குதல்கள் உக்ரைனில் நேற்று 11-வது நாளா
ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக
