சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து விட்டதாக காங்கிரஸ் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றிய போது, “இந்திய மண்ணை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் கடமை. அந்த கடமையிலிருந்து மோடி தவறிவிட்டார். லடாக் எல்லையில் பதட்டத்தை தடுப்பது தொடர்பான உடன்பாடு சீனாவுக்கு சாதகமாக இருக்கிறது. இந்திய இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய மலைப்பகுதிகள் விட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முக்கியமாக சீனாவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்து விட்டது. கைலாஷ் மலை பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு இடத்தைக்கூட சீனாவுக்கு விட்டுத்தர மாட்டோம் எனக்கூறி நிலையில் ராகுல் விமர்சித்துள்ளார். எல்லைகளை பாதுகாக்க நமது ராணுவம், விமானப்படை , கப்பற்படை தயாராக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய படைகள் கைப்பற்றிய பகுதிகளை பிரதமர், சீனாவிற்கு கொடுத்துவிட்டார். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சினை நிலவி வருகிறது; தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது. சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார், சீனாவுக்கு பணிந்து செல்கிறார். சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார்” என்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர
ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந
ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக
சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை ச
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச்
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு
உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற
சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்
