பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கொழும்பு, அவிஸ்ஸாவெல்ல, பியகம மற்றும் வவுனியாவில் இருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை மிக வேகமாக பரவுக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட புதிய கொரோனா வைரஸ், தற்போதுவரை 50 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸால், நோயாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய வைரஸ், உலகம் முழுவதும் புதிய கொரோனா அலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நாள்தோறும் 800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேபோன்று கடந்த சில வாரங்களாக ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், வவுனியா மாவட்டம் ஒரு இடைநிலை ஆபத்துள்ள பகுதி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்
கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள
வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் மு
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
