இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் 3000 மையங்களில் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்திருந்ததால் ஆரம்பக்கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கடந்த மாதம் 16ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடும் பணி நேற்று தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் முன்களப்பணியாளர்களுக்கு போடும் பணி முடிவடைந்து, மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,194 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 11,106 டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 82,63,858 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்புகள் 1,55,642 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து <
தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார
தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்
சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்
தமிழகத்தில்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500 இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக் சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த
