தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த சில கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை தென் கொரியா தளர்த்தியுள்ளது.
இருப்பினும் 4 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு கட்டுப்பாடுகளை தென் கொரியா அறிவித்துள்ளது.
பெப்ரவரி 26 முதல் தடுப்பூசி திட்டத்தை தொடங்க தென் கொரியா திட்டமிட்டுள்ளது, அதன் விவரங்கள் அந்நாட்டு கொரோனா தடுப்பு நிறுவனத்தின் தலைவரால் அறிவிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், சியோல் மற்றும் அண்டை பகுதிகளில் தொற்று கொத்துகள் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அப்பகுதிகளுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இன்று திங்கட்கிழமை முதல் சியோல் பகுதியில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக உணவகங்கள் மற்றும் கபேக்கள் ஆகியவற்றினை மூடுவதற்கான நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
மதுபான நிலையங்கள் மற்றும் இரவு விடுதிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை திரையரங்குகள், இணைய சேவை நிலையங்கள், பூங்காக்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 83 ஆயிரத்து 869 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 1,527 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு
இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்க
மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க
தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள்
