தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த சில கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை தென் கொரியா தளர்த்தியுள்ளது.
இருப்பினும் 4 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு கட்டுப்பாடுகளை தென் கொரியா அறிவித்துள்ளது.
பெப்ரவரி 26 முதல் தடுப்பூசி திட்டத்தை தொடங்க தென் கொரியா திட்டமிட்டுள்ளது, அதன் விவரங்கள் அந்நாட்டு கொரோனா தடுப்பு நிறுவனத்தின் தலைவரால் அறிவிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், சியோல் மற்றும் அண்டை பகுதிகளில் தொற்று கொத்துகள் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அப்பகுதிகளுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இன்று திங்கட்கிழமை முதல் சியோல் பகுதியில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக உணவகங்கள் மற்றும் கபேக்கள் ஆகியவற்றினை மூடுவதற்கான நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
மதுபான நிலையங்கள் மற்றும் இரவு விடுதிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை திரையரங்குகள், இணைய சேவை நிலையங்கள், பூங்காக்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 83 ஆயிரத்து 869 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 1,527 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக
கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார
தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதி
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித
மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப்
கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணு
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்
சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
