மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இடம்பெறவுள்ள நிலையில் இன்று மூன்றாவது நாளாக அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நெறிமுறை காரணமாக, அவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ் போட்டியை பார்வையிட 30,000 ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இது வழக்கத்தை விட 50% குறைவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றினை எதிர்த்துப் போராடுவதில் வெற்றிகண்ட நாடுகளில் ஒன்றான அவுஸ்ரேலியாவில், ஜனவரி மாதம் மெல்போர்னை வந்தடைந்த வீரர்கள் இரண்டு வாரம் ஹோட்டல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளியுடன் கிட்டத்தட்ட 1,200 நெருங்கிய தொடர்புகள் இருந்ததாகவும் அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் மெல்போர்ன் தலைநகரான விக்டோரியா மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த வாரங்களில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு அவுஸ்ரேலியாவில் புதிய உள்ளூர் கொரோனா தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை
நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நி
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாட
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதி
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது
ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச
இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் பிரபல த
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்ப
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர
