தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களுடைய சிக்கல்கள் தொடர்பில் இன்று மாலை அமைச்சர் நிவாட் கப்ரால் உடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகளுக்கான தவணை கட்டணத்திற்கான வட்டியை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாளையதினம் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டிருந்தன.
எவ்வாறாயினும் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதி முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
வவுனியாவில் நேற்று 10பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்த
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒ
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய
