நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 54 ஆயிரத்து 352 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியாவிடம் மேலதிகமாக தடுப்பூசிகளை வழங்குமாறு கடந்த வியாழக்கிழமை, இலங்கை கோரியிருந்தது.
இவ்வாறு தடுப்பூசிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த 500,000 ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இலங்கை நன்கொடையாகப் பெற்ற பின்னர், ஜனவரி 29ஆம் திகதி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.
முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸார் என முன்கள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம், பொது மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன
நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்
நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந
இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப
தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை
