வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டாவது தடவையாக இன்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
கடந்த ஜனவரி மாதம் வவுனியாவில் பட்டாணிச்சூரில் கண்டுபிடிக்கப்பட்ட சமூகப்பரவலையடுத்து வவுனியா நகரம் முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பலருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்புபட்டவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு பி.சி.ஆர் . பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலையடுத்து மீண்டும் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கு தொற்று ஏற்படவாய்ப்புக்கள் காணப்படுவதையடுத்து பொது மக்களின் நன்மை கருதி வவுனியா வர்த்தகர் சங்கம் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையுடன் இணைந்து இன்று வவுனியா நகரிலுள்ள வர்த்தகர்களுக்குப் பி.சி .ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
இந்நடவடிக்கைக்கு நகரிலுள்ள வர்த்தகர்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி சமூகத்தில் எற்படவுள்ள நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முன்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்
2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
