More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • டெல்லியில் நடந்த இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதிலும் கவனம்!
டெல்லியில் நடந்த இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதிலும் கவனம்!
Feb 16
டெல்லியில் நடந்த இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதிலும் கவனம்!

 இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



இந்திய பிரச்சனையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம் வெளிநாட்டவர் இதில் தலையிட வேண்டாம் என்று சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், அக்‌ஷய்குமார், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் குரல் கொடுத்து வந்தனர். மத்திய அரசின் அழுத்தத்தால்தான் இவ்வாறு குரல் கொடுத்து வந்ததாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை செய்தன.



விவசாயிகள் எப்படி போராட்டத்தினை தீவிரப்படுத்த வேண்டும், போராட்டத்திற்கு எவ்வாறு நிதி உதவி பெற வேண்டும் என்று உருவாக்கப்பட்டிருந்த டூல்கிட்டினை சர்வதேச சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க் ஷேர் செய்டிருந்ததை அடுத்து, டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, கிரேட்ட தன்பெர்க்கின் பதிவினை அகற்றினர்.



அந்த டூல்கிட்டின் பின்னணியில் இருப்பவர்களை பற்றி டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோதுதான், பெங்களூரு மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவி திஷாரவி சிக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளரான திஷா ரவியை கைது செய்து, சிறையிலும் அடைத்துவிட்டனர்.



திஷா ரவியின் கைதுக்கு ராகுல்காந்தி, ப.சிதம்பரம், அரவிந்த் கெஜ்ரிவால், திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.



ஆனால், பாகிஸ்தானின் ஆளுங்கட்சி திஷாரவிக்கு ஆதரவுதெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘’மோடி ஆட்சி, தங்கள் அரசுக்கு எதிரான அனைத்து குரல்களையும் மவுனமாக்குகின்றது’’ என்றும், ‘’கிரிக்கெட் வீரர்களையும், சினிமா பிரபலங்களையும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துவது வெட்கக்கேடாது’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி தெரிவித்திருக்கிறது.



பாகிஸ்தான் பிரதமரின்கட்சி தெரிவித்திருப்பதால் இது சர்வதே சதிதானா? என்ற கோணத்தில் சலசலப்புஏற்பட்டிருக்கிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul03

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி

Sep05

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்

Sep23

பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல

Feb07

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க

Mar20

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க

Mar03

உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட

Mar08

பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ

Feb16

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித

Jul26

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம

Jun15

தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா

Jun13

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம

May27

தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட

Aug05

ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக

Apr01

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய

Apr15

கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (20:13 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (20:13 pm )
Testing centres