More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்!
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்!
Feb 20
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்!

பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பேசும்போது கூறியதாவது



உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பெங்களூருவில் பரவியுள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானது. இது வேகமாக பரவக்கூடியது. அதனால் இத்தகைய வைரஸ்கள் பெங்களூருவில் பரவுவதை தடுக்க அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். கேரளா, மராட்டியத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும்.



3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதற்காக பொதுமக்கள் தங்களின் பெயர்களை செயலியில் பதிவு செய்ய வேண்டும். பெங்களூருவில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களை கண்டறியும் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.



அதாவது சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை உடையவர்களை கண்டறிந்து தடுப்பூசி வழங்கப்படும். வீடு, வீடாக சென்று விவரங்கள் சேகரிக்கப்படும். இதற்காக ஒரு செல்போன் செயலி உருவாக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ரத்த பரிசோதனை செய்தால், தவறான தகவல்கள் வருவது தடுக்கப்படும். உருமாற்றம் அடைந்த கொரோனா பரவுவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உண்டாகும்.



பெங்களூருவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கூட்டங்கள், விழாக்களிலும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேரளா, மராட்டியத்தில் சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.



வருகிற மார்ச் மாதம் வரை மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டாம் என்று மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும். கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏதாவது இறப்பு நிகழ்ந்தால் அதுகுறித்து அன்றைய தினமே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச

Oct05

உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப

Jul25

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர

Apr22

மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற

Apr12

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு

Oct25

ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச

Apr19

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப

Apr01

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக

Apr23

இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த

Aug25

மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந

Jul11

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்ற

Sep13

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட

Dec28

டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச

Jun20

முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த

Jan21

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (01:11 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (01:11 am )
Testing centres