எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அவசர நிலைமைகளுக்கு சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையில் கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது,
நாடு முழுவதும் உள்ள 4,513 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
நிலவும் கொரோனா பரவல் காரணமாக அவசர நிலை ஏற்பட்டால் சிகிச்சை வழங்குவதற்காகவும் அந்தந்த பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்காகவும் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலைகளினது அறைகளின் வசதிகள் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும் இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறியப்படுத்தவும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பரீட்சை மையங்களில் உள்ள வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் அங்கு கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உள்ளூர் சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொல
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
