பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, அங்கிருந்த ஊழியர்களிடையே ஒருவித பதற்றம் உண்டானது. அதை தணிக்க விரும்பிய மோடி, அவர்களிடையே உரையாடினார். பெயர், ஊர் போன்ற விவரங்களை கேட்டார்.
புதுச்சேரியை சேர்ந்த நர்சு நிவேதா தடுப்பூசி போடவும், கேரளாவை சேர்ந்த நர்சு ரோசம்மா அனில் துணையாக இருக்கவும் ஏற்பாடாகி இருந்தது. அவர்களை இயல்புநிலைக்கு கொண்டுவர நினைத்த மோடி, அவர்களை பார்த்து, ‘‘கால்நடைக்கு போடும் ஊசியை பயன்படுத்த போகிறீர்களா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த நர்சுகள் ‘‘இல்லை’’ என்று பதில் அளித்தனர். இருந்தாலும், அவரது கேள்வியின் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை.
உடனே மோடி, ‘‘ஒன்றுமில்லை. அரசியல்வாதிகள், தடித்த தோல் கொண்டவர்கள் அல்லவா? அதனால், அவர்களுக்காக தடித்த, விசேஷ ஊசியை பயன்படுத்த போகிறீர்களா? என்று கேட்டேன்’’ என்று கூறினார்.
அதைக்கேட்ட 2 நர்சுகளும் விழுந்து விழுந்து சிரித்தனர். அங்கு சகஜநிலை உருவானது.
தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடங்கள் அங்கிருந்த மோடி, கிளம்புவதற்கு முன்பு 2 நர்சுகளிடமும் ‘நன்றி’, ‘வணக்கம்’ என்று கூறிவிட்டு சென்றார்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக
மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்
பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர
தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா
சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்
ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ
