டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஓசூர் சட்டமன்றத் தொகுதியிலும், சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியிலும் ஏதாவது ஒன்றில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மூன்று முறை ஓசூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக பணியாற்றி உள்ளேன். கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ,ஹிந்தி, தமிழ் என பல மொழிகள் பேசுகிற மக்கள் அதிகமாக உள்ள இடங்கள் ஓசூர் மற்றும் அண்ணா நகர் .
அண்ணாநகரில் வியாபாரரீதியாக பல வருடங்கள் வசித்து வந்தேன். அண்ணாநகரில் தேர்தல் பணியாற்றியுள்ளேன். அதனால் அந்த இரு தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். டிடிவி தினகரன் எங்கு நின்றாலும் அவரை தலைமை அனுமதியோடு எதிர்த்துப் போட்டியிட தயார். டிடிவி தினகரன் ஆர்கேநகர் வாக்காளர்களை ஏமாற்றியுள்ளார். தொகுதி பக்கமே போவதில்லை. ஆகவே ஆயிரகணக்கான வாக்காளர்கள் அவர் எங்கு நின்றாலும் அவரை தோற்கடிக்க என்னோடு களம் காண்பார்கள்” என்றார்.

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா
அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி
நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம
சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அ
